

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இன்று அதிகாலை புல்வாமாவில் உள்ள டிகேன் என்ற பகுதியில் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.