தாயின் சடலத்தை ஒரு வருட காலமாக வீட்டில் வைத்திருந்த மகள்கள்

கடந்த சில தினங்களாக மகள்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தாயின் சடலத்தை ஒரு வருட காலமாக வீட்டில் வைத்திருந்த மகள்கள்
Published on

வாரணாசி,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மதர்வா பகுதியைச் சேர்ந்தவர் உஷா திரிபாதி (வயது 52). உஷா அவரது மகள்களான பல்லவி திரிபாதி (வயது 27), வைஷ்விக் திரிபாதி (வயது 18) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த உஷா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். உஷாவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர்களை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தனது மனைவி இறந்த பின்பும் மகள்களை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு வரவில்லை.

இதற்கிடையே, தாய் இறந்த சோகத்தில் இருந்து வெளிவராத மகள்கள், தாயின் உடலுக்கு இறுதியாக செய்யும் எந்த ஒரு சடங்கையும் செய்யாமல், உடலை வீட்டின் ஒரு அறையில் வைத்திருந்தனர்.

கடந்த சில தினங்களாக இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால், கதவு மூடியே இருந்தது. அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கதவைத் தட்டினர். கதவுகள் திறக்கப்படாததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வீட்டின் கதவை போலீசார் தட்டியும் திறக்காத நிலையில், போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு அறையில் சடலம் கிடந்தது. இரண்டு மகள்களும் வேறு ஒரு அறையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com