ஜம்மு காஷ்மீரில் பள்ளத்திற்குள் மினி பேருந்து கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்திற்குள் மினி பேருந்து கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்திற்குள் மினி பேருந்து கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
Published on

பனிஹால்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கேலா மோர் பகுதியில் மினி பஸ் ஒன்று 200 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஓட்டுநரும் பலியாகி உள்ளார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com