இந்தியாவில் இதுவரை 220.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய அரசு தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 220.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 95.17 கோடி 2-வது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதே சமௌஅம் இந்தியாவில் தற்போது 1,842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், இதுவரை மொத்தம் 4,41,50,057 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com