ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 20 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துள்ளானது . இந்த விபத்தில் 20 பேர் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 20 பேர் பலி
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள கேஸ்வன் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த 20 பேர் பலியாகினர். கேஸ்வன் நகரில் இருந்து கிஸ்த்வார் நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com