பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.25 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்; நைஜீரிய வாலிபர் கைது

பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.25 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.25 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்; நைஜீரிய வாலிபர் கைது
Published on

பெங்களூரு:

பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்கள் விற்க சிலர் முயற்சிப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றிய வெளிநாட்டு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தியபோது, போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், நைஜீரியாவை சேர்ந்த கார்லே ஓகன்கோவா என்று தெரிந்தது.

இவர், தொழில் தொடர்பான விசாவில் இந்தியாவுக்கு வந்திருந்தார். விசா முடிந்த பின்பும் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கார்லே மீது கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com