மேற்கு வங்காளத்தில் புதிதாக 2,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 2,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மேற்கு வங்காளத்தில் புதிதாக 2,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 2,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,323 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 56 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 2,259 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 2,497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 78,617 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 26,447 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com