காஷ்மீரில் 33 நாட்களில் 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த 33 நாட்களில் 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
காஷ்மீரில் 33 நாட்களில் 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொலை
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஹர்வான் பகுதியில் அதிகாலை முதல் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. தொடர்ந்து பல மணிநேரம் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.

இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறும்போது, காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த 33 நாட்களில் 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

அவர்கள் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல், பொதுமக்களை படுகொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்.

இந்த செயல்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் குறிப்பிடும்படியாக ஸ்ரீநகரில் அமைதியை குலைக்கும் நோக்குடன் பாகிஸ்தான் ஈடுபடுவதனை வெளிப்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com