மணிப்பூரில் கடைக்கு தீவைக்க முயன்ற 3 துணை ராணுவ வீரர்கள் கைது

மணிப்பூரில் கடைக்கு தீவைக்க முயன்ற 3 துணை ராணுவ வீரர்களை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இம்பால்,

மணிப்பூரில் பழங்குடியினருக்கும் பெருபான்மை இனத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமானது. பதற்றம் தணியாத நிலையில் மத்திய பாதுகாப்பு வீரர்கள் அந்த மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இம்பால் அருகே நியூ செக்கன் பகுதியில் 3 அதிரடி படைவீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடைக்கு அவர்கள் தீவைக்க முயன்றதாக தெரிகிறது.

அதனை தடுத்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் 3 அதிரடி படைவீரர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் மூவரையும் மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com