மும்பையில் ஏற்படும் விவகாரத்துக்களில் 3 சதவீதம் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது: அம்ருதா பட்னாவிஸ்

மும்பையில் ஏற்படும் விவகாரத்துக்களில் 3 சதவீதம் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது என அம்ருதா பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.
மும்பையில் ஏற்படும் விவகாரத்துக்களில் 3 சதவீதம் போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது: அம்ருதா பட்னாவிஸ்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

மும்பையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன்.

நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன். சாலைகள் மற்றும் பள்ளங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு நம்மை தொந்தரவு செய்கின்றன என்பதை நான் அனுபவித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com