3 மாநில சட்டசபைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரம்..!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதேவேளை, உத்தரகாண்டில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காலை 9 மணி நிலவரப்படி,

கோவாவில் 11.04 சதவீத வாக்குகள்

உத்தரபிரதேசத்தில் 9.45 சதவீத வாக்குகள்

உத்தரகாண்டில் 5.15 சதவீத வாக்குகள்

காலை 11 மணி நிலவரப்படி,

கோவாவில் 26.63 சதவீத வாக்குகள்

உத்தரபிரதேசத்தில் 23.03 சதவீத வாக்குகள்

உத்தரகாண்டில் 18.97 சதவீத வாக்குகள்

நண்பகல் 1 மணி நிலவரப்படி,

கோவாவில் 44.63 சதவீத வாக்குகள்,

உத்தரபிரதேசத்தில் 39.07 சதவீத வாக்குகள்

உத்தரகாண்டில் 35.21 சதவீத வாக்குகள்

இந்நிலையில் கோவா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கான பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி கோவாவில் 60.18 சதவீத வாக்குகள்

உத்தரகண்டில் 49.24 சதவீத வாக்குகள்

உத்தரப் பிரதேசத்தில் 51.93 சதவீத வாக்குகள்

மாநில சட்டசபைகளுக்கான வாக்குப்பதிவுகள் மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com