காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் படமலோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com