மேற்கு வங்காளத்தில் மேலும் 3,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் மேலும் 3,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 3,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,498 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 51 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,428 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 2,935 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86,771 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 27,299 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com