தெலுங்கானா: 37 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
தெலுங்கானா: 37 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்
Published on

ஐதராபாத்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டுகள் 37 பேர் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகளில் 3 பேரின் தலைக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சில மாவோயிஸ்டுகள் தலைக்கு ரூ. 4 லட்சம் வரை சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com