பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஊடுருவ முயன்ற 4 பேர் கைது; இந்திய ராணுவம் நடவடிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்த 4 பேர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஊடுருவ முயன்ற 4 பேர் கைது; இந்திய ராணுவம் நடவடிக்கை
Published on

பூஞ்ச்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் வெடிக்காத நிலையில் இருந்த குண்டு ஒன்றை காஷ்மீர் போலீசார் இன்று கைப்பற்றினர். இந்த குண்டு சிங்கஸ் என்ற இடத்தில் சரோல் பிரிவில், நல்லா பகுதியருகே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 4 பேர் பூஞ்ச் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியே வந்துள்ளனர். அவர்களை இந்திய ராணுவம் இன்று கைது செய்துள்ளது. இதனை ராணுவ வட்டாரம் வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com