

ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், வீடுகளும் மண்ணுக்குள் சிக்கின.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.