காஷ்மீர்: கனமழையால் திடீர் வெள்ளம் - 4 பேர் பலி

கனமழை, வெள்ளத்தில் 5 பேர் மாயமாகியுள்ளனர்.
காஷ்மீர்: கனமழையால் திடீர் வெள்ளம் - 4 பேர் பலி
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது.

4 பேர் பலி

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், வீடுகளும் மண்ணுக்குள் சிக்கின.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com