

லக்னோ,
முன்னாள் துணை மேயர் அபய் சிங், வார்டு கவுன்சிலர் அசோக் மிஸ்ரா உள்ளிட்டோருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அசோக் மற்றும் கோபால் இடையே இருந்த ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் இந்த கொலை நடந்திருப்பதை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து அபய் சிங், அசோக் மிஸ்ரா உள்பட 6 பேர் மீது லக்னோ கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வப்னா சிங், அபய் சிங், அசோக் மிஸ்ரா மற்றும் 2 போலீஸ்காரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரதோர், மற்றொரு போலீஸ்காரர் முன்ஷி லால் ஆகியோர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டனர்.