டெல்லியில் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்- கெஜ்ரிவால்

டெல்லியில் புதிதாக 44 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்- கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிஜிட்டல் முறையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் அடுத்த ஒரு மாதத்திற்குள் 44 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க உள்ளோம்.

அதில் மத்திய அரசு 8 நிலையங்களும், மாநில அரசு 36 நிலையங்களும் உருவாக்க உள்ளது. 21 ஆக்சிஜன் நிலையத்திற்கான உபகரணங்களை பிரான்ஸ் நாட்டிலிருந்தும், 15 ஆக்சிஜன் நிலையத்திற்கான உபகரணங்கள் இந்தியா கம்பெனிகளிடம் வாங்கப்பட உள்ளது. பேங்காங்கில் இருந்து 18 ஆக்சிஜன் டேங்கர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com