வங்காளதேசத்தில் இருந்து இதுவரை 4,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர் - மத்திய அரசு

வன்முறை காரணமாக வங்காளதேசத்தில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
வங்காளதேசத்தில் இருந்து இதுவரை 4,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர் - மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்னர். இந்த வன்முறை காரணமாக வங்காளதேசத்தில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை, 4,500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்தியர்கள் எல்லை தாண்டிய இடங்களுக்கு பாதுகாப்பாக பயணிக்க இந்திய தூதரகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சிட்டகாங், ராஜ்ஷாஹி, சில்ஹெட் மற்றும் குல்னா ஆகிய இடங்களில் உள்ள துணை தூதரகங்கள் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன.

வெளிவிவகார அமைச்சகம், தரை துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் நமது குடிமக்கள் சுமூகமாக செல்வதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருகிறது. நேபாளத்தைச் சேர்ந்த 500 மாணவர்களும், பூட்டானின் 38 மாணவர்களும், மாலத்தீவு மாணவர்களும் இந்தியா வந்துள்ளனர். வங்காளதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மீதமுள்ள மாணவர்களுடனும், அவர்களின் நலன் மற்றும் உதவிகளுக்காக இந்திய நாட்டவர்களுடனும் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com