கேரளாவில் இன்று மேலும் 4,991 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று மேலும் 4,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று மேலும் 4,991 பேருக்கு கொரோனா தொற்று
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று புதிதாக 4,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 65 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 153 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று மேலும் 23 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மாநிலத்தில் 65,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com