தெலுங்கானாவில் சாலை விபத்து: 5 பேர் பலி

தெலுங்கானாவில் வளைவில் திரும்பிய கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானாவில் சாலை விபத்து: 5 பேர் பலி
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கோபனபள்ளி என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த கார் சாலையின் வளைவில் திரும்பியபொழுது, எதிரே வந்த லாரி ஒன்று அதன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். லாரி ஓட்டுனர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com