

அமராவதி,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்கவி (வயது 35). இவர் தனது 2 குழந்தைகளுடன் நின்ட்ரா திருத்தணி சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சி.என். கண்ட் ரிகா அருகே வேகத் தடை மீது மெதுவாகச் சென்றுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த மர்ம நபர் ஒருவர் பார்கவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி விட்டார்.
இதுகுறித்து பார்கவி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.