மராட்டியத்தில் இன்று புதிதாக 5,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 092 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 110 பேர் உயிரிழந்தனர்.
மராட்டியத்தில் இன்று புதிதாக 5,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 092 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 19 ஆயிரத்து 858 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15 லட்சத்து 77 ஆயிரத்து 322 பேர் குணமடைந்து உள்ளனர்.

அதில் இன்று மட்டும் 8 ஆயிரத்து 232 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 96 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 110 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 45 ஆயிரத்து 240 பேர் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com