அருணாசலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு..!

அருணாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாங்கின் அருகே நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

இட்டாநகர்,

அருணாசலப்பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் அருகே நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு சுமார் 9.51 மணியளவில் சியோங் மாவட்டத்தில் உள்ள பாங்கினில் இருந்து வடக்கே 1174 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com