

புதுடெல்லி,
2025-26ம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாப்பில் தலா 4 கல்லூரிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் தலா 3 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.
குஜராத், கர்நாடகா, புனே மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 கல்லூரிகளும், குறைந்தபட்சமாக ஹரியானா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தலா 1 கல்லூரிகளும் மூடப்பட்டதாக இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.