5 மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக டெல்லியில் 5-ந்தேதி காங். எம்.பி.க்கள் கூட்டம்

5 மாநில தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 5-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.
Image Courtesy: The Indian Express
Image Courtesy: The Indian Express
Published on

புதுடெல்லி,

5 மாநில தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 5-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்கிற இந்த கூட்டத்தில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் நடப்பு அரசியல், முக்கிய பிரச்சினைகள், இரு அவைகளிலும் செயல்படும் விதம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படுகிறது. பெட்ரோல்-டீசல், எரிவாயு விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், மத்திய அரசு செவி கொடுக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பது பற்றியும் விவாதிக்கப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com