கர்நாடகா: பஜ்ரங்தள் நிர்வாகி கொலை வழக்கு - 6 பேர் கைது

கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி ஹர்ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
கர்நாடகா: பஜ்ரங்தள் நிர்வாகி கொலை வழக்கு - 6 பேர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம், சிவமொக்கா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்தனர்.

இச்சம்பவம் சிவமொக்கா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹர்ஷா கொலைக்கு கண்டனம் தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.

வன்முறையின் போது கடைகள், பஸ், கார்கள் அடித்து நெறுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், சிவமொக்கா நகரில் பதட்டம் அதிகரித்தது. பதட்டத்தை தணிக்க நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பஜ்ரங்தள் பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிவமொக்கா மாவட்ட எஸ்.பி. லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட காஷிப், நதீம், ஆசிப் மற்றும் ரிஹன் உள்பட 6 பேரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் மேலும் 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com