மராட்டியத்தில் கட்டிடம் இடிந்து 6 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்

தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
மராட்டியத்தில் கட்டிடம் இடிந்து 6 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்
Published on

மும்பை,

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 முதல் 7 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாலாஜி நகர் பகுதியில் அமைந்திருந்த கோஹினூர் என்ற நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 48 குடியிருப்புகள் இருந்ததாகவும், சம்பவம் நடந்தபோது பலர் உள்ளே இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எப்.), மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிருடன் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த கட்டிடம் ஏற்கனவே பாதுகாப்பற்றது என்று மாநகராட்சி அறிவித்திருந்ததாகவும், அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com