கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
படம் : ANI
படம் : ANI
Published on

புதுடெல்லி

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் மூலம் பலருக்கும் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இவர்களில் 300 க்கும் மேற்பட்ட தப்லிகி ஜமாஅத் ஆர்வலர்கள் கொரோனா சோதனை செய்துள்ளனர், மற்றவர்கள் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிஜாமுதீன் சம்பவம் குறித்துபேட்டி அளித்த சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:-

24 மணி நேரத்தில் 36 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, மொத்தம் 2301 ஆக உயர்ந்து உள்ளது

கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தமான் & நிகோபார், அசாம், டெல்லி, இமாச்சல பிரதேசம், அரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் இந்த பாதிப்புகள் உள்ளன என கூறினார்.

மேலும் சிகிச்சையளிக்கும் டாக்டர்களுக்கு நோயாளிகள் ஏற்படுத்தும் தடைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நோயாளிகள் தவறாக நடந்து கொண்டதாகக் கூறும் சில ஊடக அறிக்கைகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான பிரச்சினைகளை கூற 1930 (அகில இந்திய கட்டணமில்லா எண்) மற்றும் 1944 (வடகிழக்குக்கு ) ஆகியவற்றுக்கு மேலும் இரண்டு ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com