

முசாபர்பூர்,
பீகாரில் சமஸ்திபூர் மாவட்டத்தில் தாஜ்பூர் நகரில் இருந்து திருமண விழாவை முடித்து கொண்டுவிட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.
அந்த வாகனம் சகாரா காவல் நிலைய பகுதிக்கு வந்தபொழுது எண்ணெய் லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் அந்த இடத்திலேயே பலியாகினர். காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
காயமடைந்த 7 பேருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் எண்ணெய் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அதன் ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.