சட்டீஸ்காரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை

சட்டீஸ்காரின் ஜக்தல்பூரில் சிறப்பு அதிரடி படையினர் வன பகுதியில் நடத்திய தாக்குதலில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
சட்டீஸ்காரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை
Published on

ஜக்தல்பூர்,

சட்டீஸ்காரின் ஜக்தல்பூரில் நாராயண்பூர் மாவட்டம் அருகே மதேவாஹி வன பகுதியில் சிறப்பு அதிரடி படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மாவோயிஸ்டுகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது. இந்த சண்டை 2 மணிநேரம் நடந்தது. இதில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் இருந்து அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டன. அதனுடன் 2 ரைபிள்கள், பல்வேறு துப்பாக்கிகள் மற்றும் அதிகளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com