மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 730 நாட்கள் விடுமுறை - மத்திய இணை மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்

மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க வயது வரம்பு கிடையாது என்று ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கூறியதாவது:-

"சிவில் சர்வீசஸ் பணிகளில் நியமிக்கப்படும் பெண் ஊழியர்களும், மனைவியை இழந்த ஆண் ஊழியர்களும் தங்கள் மொத்த பணிக்காலத்தில் 2 மூத்த குழந்தைகளின் பராமரிப்புக்காக மொத்தம் 730 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவர். அக்குழந்தைகளின் 18 வயது வரை இந்த விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க வயது வரம்பு கிடையாது."

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com