மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,25,197 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் 198 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 42,831 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,50,011 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 14,31,856 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com