அசாமில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - 6 பேரின் நிலை கவலைக்கிடம்

அசாமில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 80 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அசாமில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - 6 பேரின் நிலை கவலைக்கிடம்
Published on

தேமாஜி,

அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாய் பகுதியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 80 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தேகாபம் அப்மனோலா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கிராமத்தின் பிரார்த்தனை இல்லத்தில் மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அங்கு கருப்பு கொண்டைக்கடலை மற்றும் பச்சைப்பயறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட உடனே அவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு டாக்டர்கள், செவிலியர்கள் குழு விரைந்தது.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிலர் சிகிச்சைக்காக தேமாஜி, சிலபதார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com