சிறுமியை கற்பழிக்க முயன்ற 8-ம் வகுப்பு மாணவன்: கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட்டம்

உத்தரபிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சிறுமியை கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ரேபரேலி,

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி பகுதியை சேர்ந்த பெண் நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றிருந்தார். பிற்பகலில் வீடு திரும்பியபோது, வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் 12 வயது மகளை, பக்கத்து வீட்டை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கற்பழிக்க முயன்றான்.

இதை அந்த பெண் பார்த்ததும், தாயையும், மகளையும் கத்தியால் குத்தி விட்டு மாணவன் தப்பியோடி விட்டான். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால் தொலைத்து விடுவதாக மாணவனின் பெற்றோர் மிரட்டியுள்ளனர். இதனையும் மீறி சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com