18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட 9 மாநிலங்கள்!

18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளன.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட 9 மாநிலங்கள்!
Published on

புதுடெல்லி,

நாட்டில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்ட நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 75 சதவீதத்துக்கு மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.31 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளன. அந்தமான், சண்டிகார், கோவா, இமாசலபிரதேசம், காஷ்மீர், லட்சத்தீவு, சிக்கிம், உத்தரகாண்ட், தாத்ரா நகர் ஹவேலி ஆகியவைதான் அந்த மாநிலங்கள் ஆகும்.அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், குஜராத், மத்தியபிரதேசம் ஆகியவை இடம் பிடித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com