பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மீது பதிவான வழக்கு ரத்து

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மீது பதிவான வழக்கு ரத்து
Published on

பெங்களூரு:-

பெங்களூருவில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் 56 வயது பெண் பணியாற்றி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த பெண்ணுக்கு, அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றும் நாகராஜ் மற்றும் நரசிம்மமூர்த்தி ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

அத்துடன் அந்த பெண்ணுக்கு 2 பேரும் கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர். இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி நாகராஜ், நரசிம்மமூர்த்தி மீது யஷ்வந்தபுரம் பாலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும். போலீசாரும், பெங்களூரு கோர்ட்டில் 2 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த நிலையில், தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரியும், கீழ் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் நாகராஜ், நரசிம்மமுர்த்தி ஆகிய 2 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பெண்ணுக்கு 2 பேரும் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com