இந்தியாவில் இன்று மேலும் 46,964 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்று புதிதாக மேலும் 46,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இன்று மேலும் 46,964 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,964 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணைக்கை 81,84,083 ஆக உயர்ந்துள்ளன,

இன்று காலை அறிவிக்கபட்ட 470 புதிய இறப்புகளுடன், நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த இறப்பு எண்ணிக்கை 1,22,111 ஆக உயர்ந்து உள்ளது

கொரோனாவில் இருந்து மொத்தம் 74,91,513 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர், அதில் கடந்த 24 மணி நேரத்தில் 58,684 பேர் குணமடைந்துள்ளனர். இது தேசிய மீட்பு வீதத்தை 91.54 சதவீதமாக உயர்த்தியுள்ளது, நாட்டில் தற்போது 5,70,458 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று வரை மொத்தம் 10,98,87,303 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று மட்டும் 10,91,239 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com