நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காத்மாண்டு,

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 04.37 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கமானது நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கு-வட கிழக்கே 166 கிமீ தொலைவில் மையமாக வைத்து உண்டானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com