

புதுச்சேரி,
புதுச்சேரி திருச்சிற்றம்பலம் பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய இருப்பதாக, ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.
இதை வாங்க விரும்புவதாக கூறிய ரமேஷ் என்பவர், வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி நூதன முறையில் திருடிச் சென்றதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்த சேதராப்பட்டு போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரமேஷை தேடி வருகின்றனர்.