சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவ கல்லூரி மாணவர் சாவு

சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மருத்துவ கல்லூரி மாணவர் சாவு
Published on

மங்களூரு:

சிவமொக்காவை சேர்ந்தவர் நிகில் (வயது 23). இவர் உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நிகில் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அதாவது 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். நிகிலின் நண்பர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். நிகில் பின்னால் அமர்ந்திருந்தார். இந்த நிலையில், திடீரென்று அவர்கள் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் நிகில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com