ஆதார் - பான் கார்டு இணைக்க நாளை கடைசி நாள் - வருமான வரித்துறை எச்சரிக்கை

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

புதுடெல்லி,

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளைக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்றும், ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செயல்படாது என்று அறிவிக்கவும் நேரிடும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன்பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com