எரிபொருள் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் - மத்திய அரசை விமர்சித்த ஆதித்ய தாக்கரே

எரிபொருள் விலை உயர்வு குறித்து மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
எரிபொருள் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் - மத்திய அரசை விமர்சித்த ஆதித்ய தாக்கரே
Published on

மும்பை,

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு குறித்து மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

மராட்டிய மாநில சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. அதனால், தற்போது எரிபொருள் விலை அதிகரித்துவிட்டது. விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.

விலைவாசி குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.

மராட்டிய மாநிலத்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயராது என்று நம்புகிறோம்.

கல்லூரிகளில் அரசியல் கூடாது, ஆனால் அது இப்போது செய்யப்படுகிறது. மாணவர்களின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமையாக கல்வி மட்டுமே இருக்க வேண்டும்.

நம் மாணவர்களின் பாடத்திட்டம் மிகவும் பழமையானது. இப்போது அது மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்பிக்க வேண்டும்.

மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். மராட்டியம் யார் முன்பும் தலைகுனியாது.

நமது உழைப்பே நமது பலம். இந்த சக்தியை டெல்லியில் அமர்ந்திருக்கும் மக்களிடம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com