ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்... வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்ட மூலவர் சன்னதி

ருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பு முன்னிட்டு, ஆழ்வார் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.
ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்... வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்ட மூலவர் சன்னதி
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பு முன்னிட்டு, ஆழ்வார் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.

ஆகம சாஸ்திரங்களின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மூலவர் சன்னதி உட்பட பலிபீடம், கொடிக்கம்பம், விமான கோபுரம் முதற்கொண்டு கோவிலின் உள்புற சுவர்கள் அனைத்தும் பன்னீர், சந்தனம், குங்குமப்பூ உள்ளிட்டவை கலந்த வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com