

லக்னோ,
ஜார்கண்டில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற கார் லாரியுடன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
இந்த விபத்து உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில் தோஹரிகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடந்தது. ஜார்கண்ட் பதிவு எண்ணுடன் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தனது பாதையை விட்டு விலகி எதிரே வந்த டிரெய்லர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோதல் மிகுந்த தாக்கத்துடன் நடந்ததால், கார் முழுமையாக நொறுங்கியது. வாகனத்தில் குடும்பத்தினருடன் பயணம் செய்திருந்த செல்ல நாயும் இந்த விபத்தில் உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.