கேரள முதல் மந்திரியை சமூக வலைதளத்தில் விமர்சித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை

பினராயி விஜயனை சமூக வலைதளத்தில் விமர்சித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரள முதல் மந்திரியை சமூக வலைதளத்தில் விமர்சித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கல்வி நிறுவனம் தொடர்பான பிரச்சினையில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை போலீஸ் அதிகாரி உமேஷ் விமர்சனம் செய்தார். அதனை அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கம் கேட்டனர். இதையடுத்து அவர் கோழிக்கோட்டில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com