

புதுடெல்லி,
விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மிகப்பெரிய விமானங்கள் அங்கிருந்து இயக்கப்படும். இதற்கு நீளமான ஓடுபாதைகள் தேவைப்படும் என்பதால், அந்த விமான நிலையங்களின் ஓடுபாதைகள் நீட்டித்து மேம்படுத்தப்படும்.
அந்தவகையில் தூத்துக்குடி விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்களின் ஓடுபாதைகளை நீட்டிக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இந்த பணிகள் வருகிற 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
இதில் ஜம்மு (காஷ்மீர்) விமான நிலைய ஓடுபாதை 2,042 மீட்டரில் இருந்து 2,438 மீட்டராக நீட்டிக்கப்படுகிறது. கோலாபூர் (மராட்டியம்) விமான நிலைய ஓடுபாதை 1,370 மீட்டரில் இருந்து 2,300 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. இதைப்போல திருப்பதி (ஆந்திரா) விமான நிலைய ஓடுபாதை 2,286 மீட்டரில் இருந்து 3,810 மீட்டராக நீட்டிக்கப்படுகிறது.
இந்த விமான நிலையங்களை தவிர ஜபல்பூர் (மத்திய பிரதேசம்), பரபானி (மேகாலயா), கடப்பா (ஆந்திரா) ஆகிய விமான நிலையங்களின் ஓடுபாதைகளும் நீட்டிக்கப்படுகிறது.