இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா

நாட்டில் இதுவரை 220.03 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,402- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு மட்டும் பதிவாகியுள்ளது. டெல்லியில் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 220.03 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com