இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,132- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,132 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,132- பேருக்கு கொரோனா
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மேலும் 1,132- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 14,839- ஆக குறைந்துள்ளது. கொரொனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது. மொத்த மாதிப்புடன் ஒப்பிடும் போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை விகிதம் 0.03 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.78 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை 219.72 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com