"தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" - நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தல்

தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை இன்னும் அகற்றாதது ஏன் என செந்தில்குமார் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
"தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" - நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தின் போது பேசிய தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

விதிமுறைகளின்படி 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், தமிழகத்தில் தற்போது 57 சுங்கச்சாவடிகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி உறுதியளித்து 9 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் சுங்கச்சாவடிகளை அகற்றாதது ஏன் என செந்தில்குமார் எம்.பி. கேள்வி எழுப்பினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com